Published : 03 Dec 2017 08:17 AM
Last Updated : 03 Dec 2017 08:17 AM

ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி தீவிரம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணி புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 50 அமைவிடங்களில் மொத்தம் 258 வாக்குச் சாவடிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் புளியந்தோப்பு பகுதியில் டிகாஸ்டர் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்போது இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த இடைத்தேர்தலுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பழுதானால் மாற்றுவதற்கான இயந்திரங்கள் என மொத்தம் 360 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 1300 வாக்குப் பதிவு செய்யும் இயந்திரங்கள் கைவசம் உள்ளன. அவற்றை வாக்குப் பதிவுக்கு தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவிபாட் எனப்படும் இயந்திரம் 360 எண்ணிக்கையில் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை வாக்குப்பதிவுக்கு உகந்தது என சான்றளித்த பிறகே, வாக்குபதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x