Published : 25 Dec 2017 03:49 PM
Last Updated : 25 Dec 2017 03:49 PM

மக்களிடமிருந்து சுருட்டப்பட்ட பணத்தை சுருட்டி மக்களுக்கே கொடுத்து பெற்ற வெற்றி: தமிழிசை பேட்டி

ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தலே அல்ல அது பணம் கொடுத்து பெறப்பட்ட வெற்றி என பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி குறித்த கேள்விக்கு ஆர்.கே நகரில் நடந்தது தேர்தலே அல்ல என்று தெரிவித்தார்.

சுருட்டி சுருட்டி பணத்தை கொடுத்தார்கள் மக்களிடம் சுருட்டி பெற்ற பணத்தை சுருட்டி சுருட்டி மக்களிடமே கொடுத்தார்கள். தினகரன் வெற்றிப்பெற்றுள்ளார், ஆனால் இந்த வெற்றி வாங்கப்பட்ட வெற்றி. ஆர்.கே.நகர் வாக்குகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் மக்கள் தவறான ஒருவருக்கு வாக்களித்துள்ளனர். இனி அவர்களுக்கான தேவையை போராடித்தான் பெற வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x