Published : 16 Dec 2017 09:04 AM
Last Updated : 16 Dec 2017 09:04 AM
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதில் ஜெயலலிதா அதிமுக வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் அங்கீகரித்து தேர்தல் ஆணைய படிவத்தில் வைத்த கைரேகையை சுயநினைவுடன் வைத்தாரா? என சந்தேகம் எழுப்பி கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதையடுத்து இந்த வழக்கை வரும் பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT