Published : 12 Apr 2014 12:04 PM
Last Updated : 12 Apr 2014 12:04 PM
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை அடைக்கப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி தினம் கொண்டாடப்பட உள்ளது. மகாவீரர் மது உண்ணாமையையும், ஜீவ காருண்யத்தையும் வலியுறுத்திய மகான் ஆவார்.
அவர் பிறந்த அன்றைய தினம் தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 1981 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் நாள் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT