ஆவடி பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.8.78 லட்சம் அபராதம் விதிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஆவடி பகு​தி​யில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 11 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, நுகர்​வோருக்கு ரூ.8.78 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து மின் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு மின் பகிர்​மானக் கழகத்​தின் சென்னை மையம், வடக்​கு, தெற்​கு, மேற்​கு, செங்​கல்​பட்டு மற்​றும் காஞ்​சிபுரம் அமலாக்க அதி​காரி​கள் கடந்த 11-ம் தேதி ஆவடி பகு​தி​யில் கூட்டு ஆய்வு மேற்​கொண்​டனர்.

அப்​போது 11 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டன. இதையடுத்​து, மின் நுகர்​வோருக்கு ரூ.8,77,593 அபராதம் விதிக்​கப்​பட்​டது.

புகார் தெரிவிக்கலாம்:

மேலும், சம்​பந்​தப்​பட்ட நுகர்​வோர்​கள் குற்​றத்தை ஒப்​புக்​கொண்டு குற்​ற​வியல் நடவடிக்​கையை தவிர்க்க முன்​வந்து அதற்​குரிய சமரசத் தொகை​யாக ரூ.36 ஆயிரம் செலுத்​தி​ய​தால், அவர்​கள் மீது காவல் நிலை​யத்​தில் புகார் ஏதும் பதிவு செய்​யப்​பட​வில்​லை.

மின் திருட்டு தொடர்​பான தகவல்​களை சென்னை அமலாக்க செயற்​பொறி​யாளரிடம் கைபேசி 94458 57591 என்ற எண்​ணில் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அந்த செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை மருத்துவ சமுதாயம் மன்னிக்காது’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in