நீலகிரியில் ஓணம் பண்டிகைக்கு 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரியில் ஓணம் பண்டிகைக்கு 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை
Updated on
1 min read

உதகை: ஓணம் பண்டிகையையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீலகிரி மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாளில், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களுடன் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் செயல்படும். மேலும், விடுமுறை நாளை ஈடு செய்ய செப்டம்பர் 16-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in