Published : 18 Dec 2017 10:03 AM
Last Updated : 18 Dec 2017 10:03 AM

அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி

குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டியை அறிவித்துள்ளது. இதன்படி, ’மண்பாண்ட கலைஞர்களின் சக்கரம்’ என்ற கருப்பொருளில் வரைப்பட ஓவியமாகவோ அல்லது வண்ண ஓவியமாகவோ வரைந்து அனுப்ப வேண்டும்.

பங்கேற்பாளர்கள் ஓவியத்துடன் தங்களுடைய முழு விவரத்தையும் ஏடிஜி (பிலாட்லி) அறை எண்: 108, தாக் பவன், சன்சத் மார்க், புதுடெல்லி - 110001 என்ற முகவரிக்கு வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும்.

இந்தப் போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேலும், சிறந்த ஓவியங்கள் இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் தலைகளில் பயன் படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x