ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்திருந்தபோது பிரதான அருவி பகுதியில் சீறிப்பாய்ந்த தண்ணீர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்திருந்தபோது பிரதான அருவி பகுதியில் சீறிப்பாய்ந்த தண்ணீர்.
Updated on
1 min read

தருமபுரி/மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த 16-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அளவீட்டின்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்திருந்தது. மாலை 5 மணி அளவீட்டின்போது இந்த அளவில் மேலும் உயர்வு ஏற்பட்டு விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடியாக ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

மேட்டூரில் 9,394 கனஅடி: மேட்டூர் அணைக்கு, நேற்று காலை 3,260 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 9,394 கனஅடியாகவும் அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 53.15 அடியாகவும், நீர் இருப்பு 19.85 டிஎம்சியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in