Published : 23 Dec 2017 09:55 AM
Last Updated : 23 Dec 2017 09:55 AM

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் இன்று வருகை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா நாச்சிகளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்.மூர்த்தி. கடந்த 2004-ம் ஆண்டு ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்தார். தற்போது, ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். இருதினங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூர்த்தி உயிரிழந்தார். இறந்த வீரர் மூர்த்தியின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (23-ம் தேதி) விமானம் மூலம் கோவைக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், அங்கிருந்துசொந்த கிராமத்துக்குஎடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

இறந்த ராணுவ வீரர் மூர்த்திக்கு தமிழரசி என்ற மனைவியும், மெர்வின் என்ற 2 வயது மகனும் உள்ளனர். மூர்த்தியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x