Published : 31 Dec 2017 12:03 PM
Last Updated : 31 Dec 2017 12:03 PM

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் செல்வேன்: சுப்பிரமணியன் சுவாமி

ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, 'வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்' என்று அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்கக் கூடாது. என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தால் வேறு மாநிலம் சென்று அரசியல் செய்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x