Published : 06 Dec 2017 11:06 AM
Last Updated : 06 Dec 2017 11:06 AM
ஜெயலலிதா நினைவிடத்துக்குள் தினகரன் அஞ்சலி செலுத்த நுழையும்போது, குறிப்பிட்ட சிலர் மட்டும் உள்ளே செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், போலீஸாரை தள்ளிவிட்டு பலர் உள்ளே நுழைந்தனர். நெரிசலால் தினகரன் தட்டுத்தடுமாறி உள்ளே வந்தார். சமாதி முன்பு அஞ்சலி செலுத்த நின்றபோது, ஆதரவாளர் ஒருவர் பின்புறம் விழுந்ததால், நிலைதடுமாறிய தினகரன், சமாதி மீது ஒரு கால் வைத்து ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்டு இறங்கிய அவர், சமாதியை தொட்டு வணங்கியபடியே இருந்தார். நெரிசலால் கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் சமாதி மீது தடுமாறி விழுந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT