Published : 28 Dec 2017 09:15 AM
Last Updated : 28 Dec 2017 09:15 AM

ஜன. 5 அல்லது 8-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும், ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும்.

பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோப்புகள், பேரவை செயலகத்தில் இருந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. ஜன.5-ம் தேதி அல்லது 8-ம் தேதியில் பேரவை கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x