Published : 30 Nov 2017 09:56 AM
Last Updated : 30 Nov 2017 09:56 AM

திமுக வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷ் நாளை (டிச. 1) வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகமும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிட்டார். தற்போது ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா அல்லது திமுகவை ஆதரிப்பதா என்பது குறித்து கோவையில் இன்று நடைபெறும் மார்க்சிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x