Published : 15 Nov 2017 09:48 AM
Last Updated : 15 Nov 2017 09:48 AM

புற்றுநோய் சிகிச்சைக்காக ‘கேன்சர் கவர்’ பாலிசி எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது

புற்றுநோய் சிகிச்சைக்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ‘கேன்சர் கவர்’ என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி யுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ‘கேன்சர் கவர்’ என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, எல்ஐசி நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது:

எல்ஐசி நிறுவனம் ‘எல்ஐசி கேன்சர் கவர்’ என்ற பெயரில் புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை (பாலிசி) அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச் சந்தையுடன் இணையாத திட்டம். மேலும், இதன் பிரீமியத்தை ஆண்டு அல்லது அரையாண்டுத் தவணைகளில் செலுத்தலாம். காப்பீட்டுதாரர் பாலிசி காலத்தில் ஆரம்ப அல்லது முதிர்ந்த நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய வந்தால் பாலிசி விதி மற்றும் வரைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆரம்ப நிலை புற்றுநோயாக இருந்தால் தொகை யின் 25 சதவீதம் வழங்கப்படும். மேலும், 3 வருடத்துக்கான பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும்.

முதிர்ந்த நிலை புற்றுநோயாக இருந்தால் 100 சதவீதம் காப்பீட்டுத் தொகை அல்லது உயர்த்தப்பட்ட காப்பீட்டுத் தொகையில் இருந்து ஆரம்ப நிலையில் தொகை ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால் அதைக் கழித்தது போக மீதியுள்ள தொகை வழங்கப்படும். மேலும், முதிர்ந்த நிலையில் காப்பீட்டுத் தொகையின் ஒரு சதவீதம் 10 வருடங்களுக்கு காப்பீட்டுதாரர் உயிரோடு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மாதந்தோறும் வழங்கப்படும். அத்துடன் கட்டப்பட வேண்டிய பிரீமியங்களும் தள்ளுபடி செய் யப்படும்.

முன்பே உள்ள நோய் நிலைகள் விலக்கப்படும். பாலிசி தொடங்கிய நாள், புதுப்பித்த நாளில் இருந்து 180 நாட்கள் காத்திருக்கும் காலமாகும். 20 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இப்பாலிசியை எடுக்கலாம். மேலும், 75 வயது வரை பலன்கள் கிடைக்கும். காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலமும் இப்பாலிசியை பெறலாம்.

இவ்வாறு தாமோதரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x