Published : 08 Nov 2017 10:38 AM
Last Updated : 08 Nov 2017 10:38 AM

சென்னையில் 9 நாட்கள் பெய்த மழை ஓய்ந்தது; சற்றே இளைப்பாறுவோம்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த மழை ஓய்ந்துவிட்டது என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/): சென்னையில், அதிகாலை நேர மழை முடிவுக்கு வந்தது. கடந்த 9 நாட்களாக சென்னைக்கு தொடர்ந்து மழை தந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கு விடையளிப்போம்.

இனிவரும் நாட்களில் சென்னையில் வெயில் அடிக்கும். அவ்வப்போது சிறிய மழை தூரல்கள் இருக்கும். அது பருவமழையின் இயல்பே.

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா பகுதிகளில் இன்று மழை பெய்யும்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற மேற்கு மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும். நாளை இப்பகுதிகளிலும் மழை முழுவதுமாக நின்றுவிடும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் 9 நாட்கள் தொடர்ந்து நல்ல மழை பெய்வது என்பது சிறப்பான வானிலை நிலவரம். அதனால், அடுத்த 4 முதல் 5 நாட்கள் சிறு இடைவெளி எடுத்துக்கொள்வோம். பின்னர் , காற்றின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை கவனிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x