Published : 01 Nov 2017 08:41 PM
Last Updated : 01 Nov 2017 08:41 PM

கொடுங்கையூர் சிறுமிகள் பலி; 8 பேர் பணியிடை நீக்கம்: அமைச்சர் தங்கமணி

கொடுங்கையூரில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 3 பொறியாளர்கள் உட்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மின்வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தையடுத்து, மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கொடுங்கையூரில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 3 பொறியாளர்கள் உட்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு மின்வாரியம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x