Published : 18 Nov 2017 09:31 AM
Last Updated : 18 Nov 2017 09:31 AM

கீழ்ப்பாக்கத்தில் 8.5 கிலோ தங்க நகை திருட்டு: 5 பேர் கைது

கீழ்ப்பாக்கத்தில் நகைக்கடை அதிபரிடம் 8.5 கிலோ தங்க நகையை திருடிச் சென்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் உக்கம்ராஜ் (44). அதே பகுதியில் தங்க நகை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் ஆர்டரின் பேரில் பெறப்பட்ட 8.5 கிலோ தங்க நகையை தன்னிடம் வேலை செய்து வரும் ராஜேஷ் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். அந்த நகையை எடுத்துக் கொண்டு ராஜேஷ் தலைமறைவானார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தனபாலன் வழக்கு பதிந்து விசாரித்தார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நகையை திருட உடந்தையாக இருந்ததாக சென்னையைச் சேர்ந்த சரத்குமார், குருதரண், விழுப்புரத்தைச் சேர்ந்த சங்கர், செந்தில், விஜய் ஆகிய 5 பேர் சிக்கியுள்ளனர். ராஜேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். பிடிபட்டவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x