Published : 01 Jul 2014 09:30 AM
Last Updated : 01 Jul 2014 09:30 AM
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் மேல்ஆலத்தூரில் மிக அதிகபட்சமாக 12 செ.மீ. மழையும் குடியாத்தம் பகுதிகளில் 10 செ.மீ. மழையும், சேலம் மாவட்டம் கருமந்துரையில் 9 செ.மீ. மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம் காரணமாகத் தற்போது மழை பெய்து வருகிறது. மழைத் துளிகள் உறை நிலைக்கும் கீழே சென்றுவிடுவதால் ஆலங்கட்டி மழை சில பகுதிகளில் பெய்தது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT