Published : 24 Nov 2017 09:57 AM
Last Updated : 24 Nov 2017 09:57 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடத்தப்படும் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை ஆணையம் செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்புக்கு நேற்று இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அறிவிக்கை வெளியிட்டு 26 நாட்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், டிசம்பர் 20 முதல் 25-க்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT