உலக பழங்குடியின தினத்தில் சதுரகிரியில் குடியேறி பழங்குடியின மக்கள்

உலக பழங்குடியின தினத்தில் சதுரகிரியில் குடியேறி பழங்குடியின மக்கள்
Updated on
1 min read

வத்திராயிருப்பு: உலக பழங்குடியின நாளான நேற்று வனப் பகுதிக்குள் சென்று தேன் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்க அனுமதி கோரியும், சதுரகிரியில் கடைகள் அமைக்க அனுமதி கோரியும் பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்துவதற்காக சென்றனர்.

ராஜபாளையத்தை சுற்றியுள்ள தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிக ளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின இளைஞர்கள் வேட்டை தடுப்பு காவலர்களாகவும், சூழல் மேம்பாட்டுக் குழுவிலும் பணிபுரிகின்றனர். மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் கிடைக்கும் தேன், தினை மாவு, கிழங்கு மற்றும் மூலிகைப் பொருட்களை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

பழங்குடியின மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக வனப்பகுதிக்குச் சென்று 11 வகையான பொருட்களை சேகரிப்பதற்கு வன உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை ராம்நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் இருந்து கிடைக்கும் தேன், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதோடு, சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் நாட்களில் மலைப்பாதையில் கடைகள் அமைத்து வந்தனர்.

இந்நிலையில் சதுரகிரி மலைப்பாதையில் கடைகள் அமைப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் சென்று பொருட் களை சேகரிக்கவும், மாடுகளை மேய்க்கவும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக பழங்குடியின மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தாணிப் பாறை ராம்நகரைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பழங்குடி யினத்தை சேர்ந்த குடும்பத்தினர், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கக் கோரியும், மாடுகள் மேய்ப்பதற்கும், தேன், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதற்கும் அனுமதி கேட்டு வனப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்துவதற்காக வனப்பகுதிக்குள் சென்றனர். அவர்களை வனத்துறை மற்றும் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in