Published : 10 Nov 2017 10:22 AM
Last Updated : 10 Nov 2017 10:22 AM
தமிழகத்தில் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்க விவசாயிகளுக்கு அனு மதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி தென்னை விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்குவதற்கு தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT