Published : 26 Nov 2017 11:01 AM
Last Updated : 26 Nov 2017 11:01 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாக நடத்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 38-வது தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆர்.கே.நகர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். மதவாத பாஜகவும் மதவெறி சக்திகளும் வளர்ந்து விடக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆர்.கே.நகரில் நடக்கும் தேர்தல் நியாயமாக இருக்கும் என எவராலும் கூற முடியாது. பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு உரிமை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT