Published : 16 Nov 2017 09:39 PM
Last Updated : 16 Nov 2017 09:39 PM

மின் மீட்டர்கள் வாங்கியதில் முறைகேடு; விரிவான விசாரணை தேவை: அன்புமணி

மின் மீட்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மின் மீட்டர்கள் கொள்முதல் சிறந்த உதாரணமாகும். டெண்டரின்போது குறைந்த விலையை குறிப்பட்டவருக்கு தராமல் அதிக விலையை குறிப்பிட்டவருக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் தூண்டுதலின்பேரில் தெரிந்தே இது நடந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் முறைகேடுகள் காரணமாக மின்வாரியத்துக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்குப் பதிலாக தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே, மின் மீட்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x