Published : 22 Nov 2017 09:14 AM
Last Updated : 22 Nov 2017 09:14 AM
டெல்லியில் பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் அமையும். தமாகாவை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று நடிகர் கமலும் கூறிவருகிறார். அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின்னரே அவரது கொள்கை என்ன என்பது தெரியவரும். நான் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டத் தலைவர் பி.சதீஷ்குமார் தலைமையில் பலர் ஜி.கே.வாசன் முன்னிலையில் நேற்று தமாகாவில் இணைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT