Published : 12 Apr 2014 11:41 AM
Last Updated : 12 Apr 2014 11:41 AM

போலீஸாரை கண்டித்து எஸ்பி அலுவலகம் முற்றுகை: ஒன்று திரண்ட லாரி உரிமையாளர்கள்

போலீஸாரை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:

நாங்கள் லாரியில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்பதை கடைப் பிடித்து வருகிறோம். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் வெளிமாநில லாரிகளை கொண்டுவந்து அதிக பாரத்தை ஏற்றிச் செல்கின்றனர். இதைக் கண்டித்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி காவல் துறையிடம் ஒப்ப டைத்தோம். போலீஸார் வழக்கும் பதிவு செய்யாமல், வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடமும் ஒப்படைக்காமல் லாரியை விடுவித் துள்ளனர். மீண்டும் நாங்கள் அதிக பாரம் ஏற்றிய லாரியை மடக்கி, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் லாரியை மடக்குவது லாரி உரிமையாளர்கள் வேலை இல்லை என்று கூறி எங்கள் சம்மேளன நிர்வாகி நந்தகுமார் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிக பாரம் ஏற்றி வரும் லாரி பிடிபட்டால், அதில் உள்ள கூடுதல் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, அதிக பாரத்திற்கான அபராதத்தை வசூலித்து லாரிகளை அனுப்பி வைக்க வேண்டும். இதை காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் கடைப்பிடிக்காமல், அபராதத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கின்றனர். இதைக் கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்தது தொடர்பாக விசாரிப்பதாகவும், அதிக பாரம் ஏற்றும் லாரிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கண்காணிப்பாளர் விஜயகுமார் உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x