Published : 23 Nov 2017 09:35 PM
Last Updated : 23 Nov 2017 09:35 PM
அதிமுகவில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில், ''அதிமுக தொண்டர்களின் விருப்பம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசி எங்களுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இந்த இயக்கத்தை உடைத்து விடலாம், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடிபோல், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வந்துள்ளது. தர்மமும் நீதியும்தான் வெல்லும் என்பதை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு நிருபணமாகியுள்ளது. அதிமுகவில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT