Published : 15 Nov 2017 08:27 AM
Last Updated : 15 Nov 2017 08:27 AM

ரூ.11.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமணி (63). இவரை ஜெருசலேமுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி குரோம்பேட்டையில் ரெயின்போ டூர் அண்ட் டிராவல்ஸ் நடத்தி வரும் சாலமன் ராஜன் என்பவர் ரூ.65 ஆயிரம் பெற்றுள்ளார். இதேபோல் 17-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் வரை சாலமன் ராஜன் பண வசூல் செய்துள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி அவர்களை ஜெருசலேமுக்கு அழைத்துச் செல்லவில்லை. இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து சாலமன் ராஜனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x