Published : 11 Nov 2017 10:00 AM
Last Updated : 11 Nov 2017 10:00 AM
ஓடும் பேருந்தில் 1 கிலோ தங்க நகை திருடப்பட்டது. இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கொருக்குப்பேட்டை, ஜோஷ்வா கார்டனை சேர்ந்தவர் வித்தேஷ் (37). இவர் யானைக்கவுனியில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்துக்கு சென்ற வித்தேஷ், 1 கிலோ 8 கிராம் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு, வீடு திரும்பினார்.
ஹைதரபாத்தில் இருந்து வித்தேஷ், பேருந்தில் சென்னை வந்துள்ளார். சென்னை சென்டரல் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது பையை சோதித்துப் பார்த்த வித்தேஷ், அதிலிருந்த நகை திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். இந்த நகை திருட்டு தொடர்பாக பூக்கடை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT