Published : 07 Nov 2017 09:53 AM
Last Updated : 07 Nov 2017 09:53 AM

’தூய்மை இந்தியா’ திட்டத்தில் பேருந்துகளை தூய்மைப்படுத்தலாம்

தூய்மை இந்தியா திட்டத்தில் பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தூய்மைப் படுத்தலாம் என வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக `தி இந்து’ உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்டு, வாசகர் சேகர் கூறியிருப்பதாவது: பெரும்பாலான அரசு பேருந்துகளின் உட்பகுதி தூய்மையின்றி காணப்படுகின்றன. பேருந்துக் குள் தூசி, தின்பண்டங்கள், காகிதங்கள் கிடக்கின்றன. சொகுசு பேருந்து என நிர்வாகம் கட்ட ணம் மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், போதிய அளவில் தூய்மை பணிகளை மேற்கொள்வதில்லை. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தூய்மை இந்தியா திட்டம் மூலம் ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சுத்தம் செய்து வருகின்றனர். அதேபோல், பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களயும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக தூய்மைப் படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அரசு பேருந்துகளில் தினமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசுத்தமாக இருக்கும் பேருந்து எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.

மேலும், தூய்மை இந்தியா திட்டம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x