Published : 30 Nov 2017 06:11 PM
Last Updated : 30 Nov 2017 06:11 PM
கன்னியாகுமரி மாவட்டம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் 12 மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. குமரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் பல வழித்தடங்களிலும் போக்குவரத்து சேவை அடியோடு முடங்கியது.
பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT