Published : 05 Nov 2017 09:56 AM
Last Updated : 05 Nov 2017 09:56 AM
பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரி உபரி நீரால் தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் அதிகமாக செல்வதால் 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்துதான் செல்ல முடிகிறது. செங்கல்பட்டுவை அடுத்த, சிங்கபெருமாள்கோவில் அருகே பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரி உள்ளது. தொடர்மழை காரணமாக இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் ஆறாய் ஓடுகிறது.
தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாய்கள் தூர்ந்துவிட்டதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் சாலையில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT