Published : 05 Nov 2017 09:47 AM
Last Updated : 05 Nov 2017 09:47 AM

மழையால் விபத்துகள்: ஆட்டோ ஓட்டுநர், இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீரில் பைக் கவிழ்ந்ததில், இளைஞர் உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலியானார்.

சென்னை எர்ணாவூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (31). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து எண்ணூர், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராமகிருஷ்ணா நகர் அருகே வந்தபோது, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் அவரது பைக் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. இதில், அவர் படுகாயம் அடைந்தார்.

தகவல் கிடைத்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கிஷோர்குமார் உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து பலி

விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஸ்டீபன் (40). ஆட்டோ ஓட்டுநர். இவர் வீட்டில் இருந்த பல்புக்கு இணைப்பு கொடுத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலியானார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x