Published : 16 Nov 2017 09:24 PM
Last Updated : 16 Nov 2017 09:24 PM

திமுக தலைவர் கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திப்பு; கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி பேட்டி

கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்களான மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்றிரவு சந்தித்துப் பேசினர்.

கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் கடந்த 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிமுன் அன்சாரி கூறுகையில், ''கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது எங்களை பார்த்து புன்னகைத்தார். பாச உணர்வோடு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தோம். கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x