Published : 31 Jul 2014 09:00 AM
Last Updated : 31 Jul 2014 09:00 AM
தமிழகத்தில் பட்டா நிலங்களில் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை என்று பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியும், மனிதநேய மக்கள் கட்சியும் புகார் கூறின. தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதம் வருமாறு:
பீம்ராவ் (மார்க்சிஸ்ட்): சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகையில் 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும். மசூதி மற்றும் தேவாலயங்கள் கட்டுவதற்கு பட்டா நிலங்களில் கூட அனுமதி கிடைப்பதில்லை.
நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்): மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். நரிக்குறவர்களை அப்படி அழைக்காமல் ‘மிர்ஷிகர்’ என்று நாட்டின் இதர பகுதிகளில் அழைக்கப்படுவது போல் குறிப்பிடவேண்டும். பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் சம்பத்: பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அஸ்லம் பாஷா: மசூதி கட்டுவதற்கு பட்டா நிலங்களில் கூட அனுமதி கிடைப்பதில்லை.
நிதியமைச்சர் பன்னீர் செல்வம்: உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபிறகே அனுமதி கொடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT