Published : 31 Jul 2014 09:00 AM
Last Updated : 31 Jul 2014 09:00 AM

சர்ச், மசூதிகளுக்கு பட்டா நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கிடைப்பதில்லை: சட்டப்பேரவையில் புகார்

தமிழகத்தில் பட்டா நிலங்களில் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை என்று பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியும், மனிதநேய மக்கள் கட்சியும் புகார் கூறின. தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதம் வருமாறு:

பீம்ராவ் (மார்க்சிஸ்ட்): சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகையில் 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும். மசூதி மற்றும் தேவாலயங்கள் கட்டுவதற்கு பட்டா நிலங்களில் கூட அனுமதி கிடைப்பதில்லை.

நஞ்சப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்): மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். நரிக்குறவர்களை அப்படி அழைக்காமல் ‘மிர்ஷிகர்’ என்று நாட்டின் இதர பகுதிகளில் அழைக்கப்படுவது போல் குறிப்பிடவேண்டும். பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர் சம்பத்: பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அஸ்லம் பாஷா: மசூதி கட்டுவதற்கு பட்டா நிலங்களில் கூட அனுமதி கிடைப்பதில்லை.

நிதியமைச்சர் பன்னீர் செல்வம்: உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபிறகே அனுமதி கொடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x