Published : 03 Nov 2017 08:49 AM
Last Updated : 03 Nov 2017 08:49 AM
மழை பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முடுக்கிவிட்டுள்ளார். முதல்கட்டமாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து செயல்பட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் வாக்கி டாக்கிகளில் உத்தரவுகளை பிறப்பித்து விட்டு தங்களது அலுவலகத்திலேயே இருக்கக் கூடாது. நேரடியாக களப்பணி செய்ய வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
100 ஆயுதப்படை போலீஸார் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நேரடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT