Published : 11 Nov 2017 10:15 AM
Last Updated : 11 Nov 2017 10:15 AM

கனமழையால் சென்னையில் மின் நுகர்வு குறைந்தது

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக மின்நுகர்வு கணி்சமாகக் குறைந் துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற் றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் மின்நுகர்வு குறைந்துள்ளது.

1.5 கோடி யூனிட்டாக குறைவு

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழகத்திலேயே சென்னையில் தினசரி மின்நுகர்வு அதிகளவில் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் சராசரி மின்நுகர்வு 5 கோடி யூனிட் என்ற அளவில் இருக்கும். கடந்த ஏப்ரல் மாதம் மிக அதிகபட்சமாக 6.5 கோடி யூனிட் என்ற அளவுக்கு மின்நுகர்வு அதிகரித் தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்தவாரம் கனமழை பெய்தது. இதனால், மின்நுகர்வு 1.5 கோடி யூனிட்டாக குறைந்தது. மழைக்காலம் என்பதால் வீடுகளில் மின்விசிறி மற்றும் ஏசி இயந்திரங்களின் பயன்பாடு குறைந்துள்ளதே இதற்கு காரணம் என்றார்.

இதற்கிடையே, மிச்சமாகியுள்ள மின்சாரத்தை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் கோடை காலத்தில் மின்நுகர்வு அதிகமாக உள்ளது.

அப்போது, தேவையை சமாளிக்கின்ற அளவுக்கு மின்விநியோகம் இல்லாததால் மின்தடை ஏற்படுகிறது. எனவே, மழை மற்றும் குளிர்காலத்தில் சேமிக்கப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க மின்வாரியம் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x