Published : 13 Nov 2017 09:58 AM
Last Updated : 13 Nov 2017 09:58 AM
சென்னையில் கனமழையின் போது பல்வேறு உதவிகளை மாநகராட்சிக்கு வழங்கிய மாநகர போலீஸாருக்கு மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது:
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்த நிலையில், மழைநீர் தேக்கம் தொடர்பாக போலீஸார் உடனுக்குடன் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து உதவி செய்தனர். மழைநீரை வெளியேற்றுவதிலும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ஆய்வுக் கூட்டத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், எம்.விஜயலட்சுமி கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT