

கள்ளநோட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் ஒருவர் பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளி என்பது தேசிய புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜாகிர் உசேனுக்கு கள்ள நோட்டு சப்ளை செய்த அவர் மீது பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்காக இந்தியா வில் உளவு பார்த்ததாக ஜாகிர் உசேன் என்ற ஐஎஸ்ஐ உள வாளியை சென்னை திருவல்லிக் கேணியில் உளவு பிரிவு போலீஸார் கடந்த ஜூன் 19-ம் தேதி கைது செய்தனர். அவரிடம் தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவலின் பேரில் அவரது நண்பர்கள் சலீம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை பார்க்கும் 2 அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரபீக்(29) என்பவரும் பாகிஸ்தானுக்காக இங்கு உளவு பார்த்துள்ளார்; பாகிஸ்தான் உள வாளி ஜாகிர் உசேனுக்கு கள்ள நோட்டுகளை சப்ளை செய்துள் ளார் என்று அவர்களது விசார ணையில் தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக விசாரித்தபோது, கள்ளநோட்டு வழக்கு ஒன்றில் சிபிசிஐடி போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறை யில் இருக்கிறார் என்பது தெரிந்தது. இதையடுத்து, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கும் ரபீக்மீது பதிவு செய்யப்பட்டது.