Published : 29 Nov 2017 08:45 PM
Last Updated : 29 Nov 2017 08:45 PM

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்; நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி: கமல்

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி என்று நடிகர் கமல் ட்வீட் செய்துள்ளார்.

சமீபகாலமாக அரசியக் கருத்துகளையும், ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தன் விமர்சனங்களையும் துணிச்சலோடு கூறி வருகிறார் கமல். அரசியலுக்கு வருவதாகவும், விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லி வரும் நிலையில் கமலின் அரசியல் வருகை குறித்தும் அமைச்சர்களால், பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு.அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது'' என்று ட்வீட் செய்துள்ளார்.

எந்தப் பிரச்சினையை முன்வைத்து கமல் ட்வீட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x