Published : 28 Jul 2023 06:57 AM
Last Updated : 28 Jul 2023 06:57 AM
சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூலை 28, 29)காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஐ.டி. காரிடர்: சிறுசேரி சிப்காட், சோழிங்கநல்லூர் உமா மகேஷ்வரி நகர், காந்தி நகர், மாடல் பள்ளி சாலை.
ஆவடி: ஜே.பி. நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், கணபதி நகர், காளிகாம்பாள் நகர், சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்பு.
அதேபோல, நாளை போரூர் பகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், சுமித்ரா நகர், வைதி நகரில் மின் விநியோகம் இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT