Published : 07 Nov 2017 09:46 AM
Last Updated : 07 Nov 2017 09:46 AM

குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

மேடவாக்கம் அடுத்த பேலச்சேரி மற்றும் தொட்டியம்பாக்கம் பகுதிகளில் குரங்கு கள் தொல்லை அதிகமாக இருப்பதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த ஆ.பொற்கொடி சேகர், `தி இந்து’ உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்டு கூறிய தாவது: மேடவாக்கம் அடுத்த பேலச்சேரி மற்றும் தொட்டியம்பாக்கம் பகுதியில், கல்லூரிகள் அதிக அளவில் வந்துவிட்டன. அதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்துள்ளன. இப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிக மாக உள்ளது.

மேலும், அங்கு ஒரு நிமிடம் கூட வீட்டை திறந்து வைக்க முடியவில்லை. திறந்திருக்கும் வீடுகளில் குரங்குகள் புகுந்து, பொருட்களை எடுத்துச் சென்றுவிடுகின்றன. கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வரும்போது, அச்சத்துடன் வீட்டுக்கு வர வேண்டியுள்ளது. தெருக்களிலும் குரங்குகள் அமர்ந்து, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தமிடுகின்றன. அதனால் குழந்தை களுடன் செல்லும் பெற்றோர்கள், அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

எனவே இப்பகுதியில் குரங்குகள் தொல்லையை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக வேளச் சேரி சரக (வன உயிரின பாதுகாப்பு) வன அலுவலகத்தில் கூறியதாவது:

``குரங்குகளினால் உண்டாகும் தொல்லை, வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துவிடுவது போன்ற பிரச்சினைகள் தொடர்பாக 044 - 22200335 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இதுகுறித்து வன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x