Published : 25 Nov 2017 02:16 PM
Last Updated : 25 Nov 2017 02:16 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திருமாவளவன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு விசிக ஆதரவளிக்கும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொலைபேசி, கடிதம் வாயிலாக எங்களிடம் ஆதரவு அளிக்கும்படி கோரியதை அடுத்து, திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் மட்டுமின்றி மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலில் செயல்பட வேண்டும்'' என்றார் திருமாவளவன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x