Published : 09 Nov 2017 08:48 AM
Last Updated : 09 Nov 2017 08:48 AM
இந்தியாவின் 2-வது தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்பு ஆதரவு மையம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் வர்த்தக தொழில் அமைச்சகத்தின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது இந்தியாவின் 2-வது தொழில்நுட்பப் புதுமை படைப்பு ஆதரவு மையத்தை அமைப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் ‘டிஸ்க்’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமைகள் மையத்தில் நிறுவப் படும்.
இதன்மூலம், புதுமைப் படைப்பாளர்களுக்கு உயர்தரமான தொழில்நுட்ப தகவல்கள், அது சார்ந்த சேவைகள் வழங்கப் படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT