Published : 24 Jul 2014 12:00 AM
Last Updated : 24 Jul 2014 12:00 AM
அரசு சட்டக் கல்லூரிகளில் 50 முதுநிலை விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதில், சட்டம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 30 காலியிடங்களும், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 50 சதவீதம்) நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முதுநிலை விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 21-ந் தேதி அன்று நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். காலியிடங்கள், கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT