Published : 13 Nov 2017 02:46 PM
Last Updated : 13 Nov 2017 02:46 PM
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை திருத்த வலியுறுத்தி ஆர்.எஸ்.எஸ் சார்ந்த பாரதீய மஸ்தூர் சங்கம் நவம்பர் 17 அன்று டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தும் என அந்த அமைப்பின் தென் இந்திய அமைப்பு செயலாளர் எஸ்.துரைராஜ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
”நிதி ஆயோக் போன்ற குழுவில் உள்ளவர்களால் சிறு குறு தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாது. அதனால் அக்குழுக்களின் பரிந்துரைகள் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இல்லை. அந்த குழுவில் உள்ள “அறிவு ஜீவிகளை” நீக்கிவிட்டு அந்தந்த தொழில் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களைக் கைவிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையிலுள்ள குறைகளை களைந்து குறைந்த பட்ச ஊதியமாக ரூ.24,000 வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.17 அன்று டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் இந்தியா முழுதும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்துக்கொள்வார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT