Published : 07 Nov 2017 08:07 AM
Last Updated : 07 Nov 2017 08:07 AM

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தனிடம் திருநாவுக்கரசர் நலம் விசாரித்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், காய்ச்சல் காரணமாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகர், ரூபி மனோகரன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.

குமரி அனந்தன் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, “அவருக்கு டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x