Published : 04 Nov 2017 04:09 PM
Last Updated : 04 Nov 2017 04:09 PM
ஓட்டேரியில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மழை நீர் வடியாதததால் பொதுமக்கள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக மின்சாரமும் இல்லாததால் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை ஓட்டேரி பகுதி சிறிய மழைக்கே கடுமையாக பாதிக்கப்படும், இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் பெய்த மழை காரணமாக ஓட்டெரி சுப்பராயன் முதல் தெரு, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தெருக்களில் தண்ணீர் தேங்கி ஐந்து நாட்களாக வடியாமல் இருந்து வருகிறது.
அருகிலுள்ள ஐசிஎப் கால்வாய் பகுதியில் உள்ள கரிய நிற ஆயில் கலந்த வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் வீட்டில் தரை மற்றும் சுவர்களில் கரிய நிறத்தில் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருப்பதாகவும், கடந்த 5 நாட்களாக மின்சாரமும் இல்லாததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மாடிப்பகுதியில் வசிக்கும் மக்கள் தவிர தரைத்தளத்தில் வசிக்கும் மக்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வீட்டில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மின்சார வசதியும் இல்லாமல் இருப்பதால் தண்ணீரை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மழை நீரை அகற்ற உடனடியாக எந்திரத்தை கொண்டுவந்து நீரை அகற்றும் ஏற்பாடுகளை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT