Published : 17 Nov 2017 09:58 AM
Last Updated : 17 Nov 2017 09:58 AM

பேச்சுவார்த்தை நடத்த வருமாறு செவிலியர்களுக்கு அரசு அழைப்பு

அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் 22-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் 22-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக அரசு நேற்று அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக எம்ஆர்பி செவிலியர்கள் நலச் சங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, “அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகே அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x