Published : 03 Nov 2017 10:00 PM
Last Updated : 03 Nov 2017 10:00 PM

வெள்ளிக்கிழமை இரவு நல்ல மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன்

வெள்ளிக்கிழமை (3.11.2017) இரவு நேரத்தில் நல்ல மழை காத்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை வலுவாக பெய்து வரும் சூழலில் பிரதீப் ஜான் தன் முகநூலில் வெளியிட்ட பதிவில், "சென்னையில் மாலை நேரத்தில் தொடங்கிய மழை, பெரிய அளவுக்கு பெய்யாமல் நின்றுவிட்டது. நான் காலையில் பதிவிட்டு இருந்ததுபோல், மேகக்கூட்டங்களைக் குவிக்க காற்று தொடங்கிவிட்டது. இதை ராடாரில் நீங்கள் பார்க்கும் போது, பாம்பு போன்று நீளமாக மேகக்கூட்டம் இருப்பதை காணலாம்.

சென்னையில் அடுத்து பெய்ய இருக்கும் மழை, ஓரளவுக்கு கனமழையாக இருக்கக்கூடும். அடுத்து வரும் சிலமணி நேரங்களில் இது அதிகரிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக இரவு நேரத்தில் நல்ல மழை காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள பதிவில் "சென்னையில் பல இடங்களில் மிகத் தீவிரமாக மழை பெய்து வருகிறது. பாம்பு போன்று நீளமான மேகக்கூட்டத்தினால் மழை தீவிரமாகி உள்ளது. சென்னையில் மழை அடுத்த ஒன்று முதல் 2 மணிநேரத்துக்கு மழை தீவிரமாக பெய்யும். சாலையில் நீர் தேங்கும் அளவுக்கு மழை இருக்கும் ஆதலால், மக்கள் எங்கும் அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கவும்'' என்று அவர் கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x