

புதுடெல்லி/சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட பழைய புகாரை மீண்டும் விசாரிக்க தேவையில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 18 அன்று தீர்ப்பளித்தர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனக்கோரி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.